மீஞ்சூர் ஏட்டு தற்கொலை

சென்னை: பொன்னேரி, கெங்குசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் (40). மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயமாலா (38) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த மாதம் குடும்பத் தகராறு காரணமாக ஜெயமாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து துரைமுருகன் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய துரைமுருகன், படுக்கை அறை மின் விசிறியில் மனைவிபுடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து பொன்னேரி போலீசார் விரைந்து வந்து துரைமுருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: