சென்னை: ஜெர்மன் நாட்டிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் கூரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அந்த பார்சல்களில் ஒரு பார்சல் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கவிக்குமார் என்பவரின் பெயருக்கு வந்திருந்தது. பார்சலில் மருத்துவ பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களில் 100 மாத்திரைகள் இருந்தன. அவைகளை ஆய்வு செய்தபோது, அனைத்தும் மெத்தொகட்டமின் என்ற போதை மாத்திரைகள் என தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து சுங்கத்துறை வழக்கு பதிவு செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தது. சுங்கத்துறையின் தனிப்படையினர் அந்த பார்சலில் உள்ள முகவரியான ஈரோடு சென்றனர். ஆனால், அந்த முகவரியில் கவிக்குமாரின் தாய் மட்டுமே இருந்தார். கவிக்குமார், பெங்களூருவில் உள்ள பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் பணியில் இருப்பதாக கூறினார்.