இ- பாஸ் கிடைக்காமல் ஆரியங்காவில் சாலையோரம் உணவின்றி தவிக்கும் தமிழர்கள்

செங்கோட்டை:  தமிழக- கேரள எல்லையான ஆரியங்காவில் தமிழகத்திற்குள் வர  இ-பாஸ் அனுமதி கிடைக்காமல் உண்ண உணவின்றி தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சாலையோரம் தவிக்கின்றனர்.  கேரள மாநிலம் புனலூர் பத்தனம்திட்டா, பந்தளம், கோட்டயம் பகுதிகளில் தமிழகத்தின் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து  வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கு வேலையின்றி வேலை பார்த்த இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 அந்தவகையில் கடந்த இரு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழக- கேரள எல்லையான ஆரியங்காவில் தமிழகத்திற்குள் வர  இ-பாஸ் அனுமதி கிடைக்காமல் உண்ண உணவு உடுக்க உடை இன்றி  தமிழகத்தை சேர்ந்த  10க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் தவித்து வருகின்றனர். இதையடுத்து தங்களை சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: