கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் பைக்கில் வந்தவரை நாய் துரத்தியதால் நிலைதடுமாறி சாலையோர கிணற்றில் விழுந்த மின் ஊழியர் பலியானார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் பகுதி திப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(55). மின் ஊழியர். பெரிய ஓபுளாபுரத்தில் மின்கம்பங்களை சோதனை செய்ய சக மின்ஊழியர் தியாகராஜன் என்பவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரிய ஓபுளாபுரத்தில் சாலை திருப்பத்தில் அப்பகுதியை சேர்ந்த நபரின் ஒருவரின் வளர்ப்பு நாய் பைக்கை துரத்தியது. பின்னால் அமர்ந்திருந்த வெங்கடேசனின் மீது கடிக்க பாய்ந்தது. இதினால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், பைக்கில் இருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பு இல்லாத 70அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தும் வெங்கடேசனை மீட்க முடியவில்லை.