புழல்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கி நிறுத்தினர். அதில்வந்த இரண்டு வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணான பேசினர். அவர்களிடத்தில் முறையான வாகன ஆவணங்கள் இல்லை. இருவரையும் சோழவரம் போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், சோழவரம் அல்லிமேடு கிராமத்தை சேர்ந்த செல்வம் (26), சரவணன் (28) என்பது தெரியவந்தது.