திருமழிசை தற்காலிக மார்க்கெட் கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை துணைக்கோள் நகரப்பகுதியில் உள்ள தற்காலிக மொத்த காய்கறி சந்தையை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சந்தைக்கு ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றி நிலத்தை சமன்படுத்தி, அனைத்து பகுதிகளிலும்  சீர் செய்யும்  பணிகளை ‌ஆய்வின் வாயிலாக உறுதி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களை ஓரிரு நாட்களில் போர்க் கால அடிப்படையில் அனைத்து பணிகளை முடிப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்திரவிட்டார். அப்போது மாவட்ட‌ ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (திருமழிசை) கோவிந்தராஜ், திருவள்ளூர் கோட்டாட்சியர் ப்ரீத்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: