சென்னை: முழு முடக்கம் காரணமாக மதுரையில் ரூ. 1000 உதவித்தொகை வழங்குவது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா நிவாரண உதவி ரூ. 1000 வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 53.33 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டதாகவும், மேலும், 75 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.