சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் விவகாரம்: தாமாக வழக்கை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையீடு

சென்னை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகன் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் முறையீடு செய்துள்ளார். மேலும் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை இதுசம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: