சென்னீர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவிக்கு கொரோனா தொற்று

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சியில் 49 வயதான பெண்  ஊராட்சி மன்ற தலைவர். அதிமுகவைச் சேர்ந்த இவர் ஊரடங்கில் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். கடந்த சில தினங்களாக அவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருக்கு உதவியாக அவரது கணவரும் இந்தப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

Related Stories: