சென்னை: முதல்வர் அறிவித்துள்ள ரூ1000 நிவாரண தொகையை தெருக்களில் வைத்து விநியோகம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அந்தோணிசாமி ஜான்பீட்டர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மண்டல இணை பதிவாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்போது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தகுதியுடைய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ1000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.