சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை மாவட்டம் சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் கள ஆய்வு செய்கிறார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழன்) காலை 10 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.