சென்னை: மூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட காவல் துறையில் 37 போலீசாருக்கு கொரோனா நேற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் பெண் இன்ஸ்பெக்டர், சைதாப்பேட்டை குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் உட்பட நேற்று ஒரே நாளில் 37 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.