திருவாரூர்: திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப்பல்கலை கழகம் இயங்கி வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நடைபெற வேண்டிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முந்தைய பருவத்தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி வழங்கப்படும். இதேபோன்று பிற மாணவர்களுக்கும் முந்தைய பருவகால தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.