சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் கொரோனா சிறப்பு வார்டுகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசார் அதிகளவில் நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் துறையில் யானைகவுனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உட்பட 30 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை மாநகரம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரில் நேற்று வரை கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர், 4 துணை கமிஷனர்கள், 8 உதவி கமிஷனர்கள் என மொத்தம் 900 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.