மணிமங்கலம் கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று

குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் 25 வயதுமிக்க நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யபட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு இடுப்பு வலி அதிகமானதால், குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.   கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   இதனையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திரா நகரில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Related Stories: