திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய படூர், நாவலூர், புதுப்பாக்கம், ஏகாட்டூர், கோவளம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட 27 ஊராட்சிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து யாருக்கேனும் காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் படூர் ஊராட்சியில் நேற்று கொரோனா பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டது.