திருவொற்றியூர்: திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் சமீபத்தில் படையெடுத்ததால், அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு மற்றும் ஜோதி நகர் போன்ற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.