சென்னை: வடசென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் பலராமன் கொரோனா தொற்று காரணமாக நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 77. வடசென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக இருந்தவர் எல்.பலராமன். திமுகவின் தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். சென்னை அண்ணாநகர் 13வது மெயின் ேராடு, சாந்தி காலனி வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன் இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்த பரிசோதனையில் கொரோனா நோய்தொற்று உறுதியானது.