சென்னை: தமிழகத்தில் கொரோனோ பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோயில்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க அறநிலையத்துறை கல்வி மற்றும் தொண்டு நிறுவன இணை ஆணையர் மங்கையர்க்கரசி நியமிக்கப்பட்டார்.