சென்னை: மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று பேரல் ஒன்று கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. தகவலறிந்து கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் முனியசாமி, மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பேரலை திறந்து பார்த்தனர். அதில் இருந்த 78 பாக்கெட்டுகளில் ரீபைன்ட் சைனீஸ் டீ என சீன மொழி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, கல் உப்பு போன்று வெள்ளை நிறத்தில் இருந்தது. அவை போதை பொருளாக இருக்குமோ என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.