தமிழகத்தில் மேலும் 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக உயர்வு

* சென்னையில் பாதிப்பு 1,322

* இதுவரை 666 பேர் பலி

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 1,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 666 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரத்து 980 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் 27,537 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை 1,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 2,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 54,449 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,630 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மருத்துவமனையில் 23,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 15 பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் என நேற்று சிகிச்சை பலனின்றி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 1,279 ஆண்கள், 836 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் இதுவரை 33,520 ஆண்கள், 20,909 பெண்கள், 20 திருநங்கைகள் என 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 594 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: