கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஈசாராஜன் ஏரியோடு, தேர்வாய் ஏரியை இணைத்து நீர்தேக்கம் அமைத்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு 2011ம் திட்டம் அமைத்து செயல்படுத்த துவங்கியது. இந்த திட்டத்திற்காக 800 ஏக்கர் பட்டா நிலம், 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அரசு நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு 1 மடங்கு இழப்பீட்டை அறிவித்தது. விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் உச்சநீதி மன்றம் சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு, அரசு மதிப்பீட்டில் 2.4 மடங்கு இழப்பீட்டை வழங்கியது. மீதம் உள்ள 1.6 மடங்கு இழப்பீட்டு தொகை மற்றும் அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 589 விவசாயிகளுக்கு தர வேண்டிய வட்டி தொகையான ₹38.5 கோடியை வழங்க கோரி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.