சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீசார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.