சென்னை : மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவில்பட்டி அப்பனேரியைச் சேர்ந்த பிரகாஷ் திருப்பதி (26) ஓமன் (மஸ்கட்) நாட்டில் உயிரிழந்தார் என்ற தகவல் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், வெளியுறவுத்துறை மூலமாக உடலை தாயகம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். இந்நிலையில், பிரகாஷ் திருப்பதி உடல் கடந்த ஜூன் 18ம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. உறவினர்கள் உடலை பெற்று, சொந்த ஊருக்குச் சென்றனர்.