மூணாறு: மூணாறு, லாக்காடு கேப் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் 3 கட்டிடங்கள் தரைமட்டமாகின. பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் முழுவதும் பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை போன்ற 71 பகுதிகளில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணியளவில், லாக்காடு கேப் சாலையில் அமைந்துள்ள குகைக்கு அருகில் பயங்கர சத்தத்துடன் 250 மீட்டர் உயரத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. பாறைகளும் உருண்டோடின. 6 கிமீ தூரம் வரை சாலை பாறைகளாலும், மண்ணால் சேறும், சகதியுமாக காட்சியளித்தன.