காஞ்சிபுரம்: பாஜ ஓராண்டு சாதனை குறித்து, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, பாஜ மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.1 லட்சத்தில் 28,000 வீடுகள் கட்டப்பட்டன. அதேபோல் மத்திய அரசின் மற்றொரு திட்டமான அம்ருத் திட்டத்தின் கீழ் சாதி வேறுபாடின்றி அனைத்து சமய கோயில்களுக்கும் நிதி உதவி அளித்தது.