சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,626 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது.