ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கோவில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினசரி 20வரை உயர்ந்து வருகிறது. இதனையடுத்து, நேற்று முன் தினம் இரவு வரை தொற்றால் 420க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 221பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 180க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.