தனிச் செயலர் தாமோதரன் மறைவால் முதல்வர் பழனிசாமி வேதனை : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவு

சென்னை : முதல்வர் அலுவலக முதுநிலை தனிச் செயலர் தாமோதரன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம், பொதுத் துறை, முதலமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலராகப் பணியாற்றி வந்த தாமோதரன் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் இந்த செய்தியை அறிந்து தாம் மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா தடுப்புப் பணியின் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தாமோதரனின் சேவை மகத்தானது என்றும்  தாமோதரன் அவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை தாம் வேண்டிக்கொள்வதாகவும் தாமோதரன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் இரங்கல் அறிக்கையில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: