மதுரை: காசிக்கு செல்ல ஏற்பாடு செய்யக்கோரி, சாது அரை நிர்வாணத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் ஓடிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம், காசி பகுதியைச் சேர்ந்த சாதுக்கள் ரகுவார்தாஸ் நாகா பாபா (65), கமல்தாஸ் ஹிலாரி (33) இருவரும், கடந்த மார்ச் 15ம் தேதி காசியில் இருந்து ரயிலில் புறப்பட்டு, 18ம் தேதி ராமேஸ்வரத்திற்கு வந்தனர். அங்கு புனித நீராடி விட்டு சில நாட்கள் தங்கியிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இவர்களால் காசிக்கு செல்ல முடியவில்லை. 85 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்ந்து நீடித்ததால் மிகவும் சிரமமடைந்தனர். தங்களை காசிக்கு அனுப்பி வைக்கும்படி, ராமேஸ்வரத்தில், அதிகாரிகளிடம் முறையிட்டும். எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், ‘மதுரை செல்லுங்கள். அங்கிருந்து காசிக்கு செல்ல மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்’ என அதிகாரிகள் கூறி, ராமேஸ்வரத்தில் இருந்து பஸ்சில் ஏற்றி நேற்று மதுரை அனுப்பினர்.