ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம், அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் பகுதியில், இந்தியா மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ராணுவ வீரர் கே.பழனி நேற்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளித்தது. இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ₹20 லட்சம் உடனடியாக வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: