சென்னை: செங்கல்பட்டு -திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே கடந்த 12ம் தேதி 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடங்கியது. இந்த நிலையில் திருச்சி-செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மதியம் 2 மணிக்கு இயக்கப்பட்டு வந்த செங்கல்பட்டு-திருச்சி இடையே (06795) அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று முதல் பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.