சென்னை: அரசின் முழு ஊரடங்கு உத்தரவுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: பேரிடர் பொதுமுடக்கக் காலத்தில் தமிழக வணிகர்கள் அரசின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு உட்பட்டு, பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளிலும் அரசோடு இணைக்கமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அமைச்சரவை எடுத்துள்ள ஆய்வு கூட்ட முடிவில் பேரமைப்பு வலியுறுத்திய முழு ஊரடங்கிற்கு ஆதரவாக ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருப்பதை முழு மனதோடு வரவேற்கிறோம். அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிப்பதற்கு பேரமைப்பு கடமைப்பட்டுள்ளது.