கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்: ஸ்டாலின் டிவிட்டரில் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அரசு முதலில் வெளிவந்து விரிவான பரிசோதனைகள், தொற்றுக்கான தொடர்புகள், உரிய சிகிச்சைகளே கொரோனாவை தடுக்கும் வழி என்பதை உணர வேண்டும். மீண்டும் முழு ஊரடங்கு என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன முதல்வர் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அறிவிக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: