கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். கோவை ஆர்ஜி புதூர் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் சென்னை குளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த வாரம், சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மூன்று நாள் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை மிக மோசமானதையடுத்து, நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறியான சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது. இதனால் இவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதையடுத்து, அவருக்கு முதல் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முதல் பரிசோதனையில் குறிப்பிட்டுள்ளது போல எந்தவித தொற்றும் இல்லை என தெரியவந்துள்ளது.