திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வழியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. தற்போது அணையில் மொத்த உயரமான 35 அடியில் 21 அடி உயரம் தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா கால்வாய் வழியாக வினாடிக்கு 147 கன அடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூண்டிக்கு வந்து ஏரியின் ரம்யமான காட்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், ஏரியை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் சிலர், கிருஷ்ணா கால்வாயில் வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளியல் போட்டு செல்கின்றனர்.