சென்னையை தொற்று நரகமாக்கிய கிருமி!! : 15 மண்டலங்களிலும் கொரோனாவின் அட்டகாசம் உச்சம்!!

சென்னை:  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 16,671 பேர் குணமடைந்துள்ள நிலையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.96% பேர் ஆண்கள், 40.03% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 15ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 5,216

கோடம்பாக்கம் – 3,409

திரு.வி.க நகரில் – 2,922

அண்ணா நகர் – 3,150

தேனாம்பேட்டை – 3,844

தண்டையார் பேட்டை – 4,082

வளசரவாக்கம் – 1,395,

அடையாறு – 1,809,

திருவொற்றியூர் – 1,171,

மாதவரம் – 854

பெருங்குடி – 594,

சோளிங்கநல்லூர் – 586,

ஆலந்தூர் – 624,

அம்பத்தூர் – 1,105,

மணலி – 448 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 687 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: