காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த வேளியூர் பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் மில்லில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு அட்டைப் பெட்டிகள் எரிந்து நாசமாகின. காஞ்சிபுரத்தை அடுத்த வேளியூரில் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, அக்கம் பக்கத்தில் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.