சென்னை: அமெரிக்காவில் சிக்கித் தவித்த 164 இந்தியர்கள் ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வந்தனர். கொரோனா வைரஸ் பீதி ஊரடங்கால் விமான சேவைகள் ரத்தானதால் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் கடந்த 3 மாதங்களாக தவித்தனர். இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 164 இந்தியர்களுடன் நியூயார்க்கிலிருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு மீட்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.