சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்க்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் என்று அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதற்கு ஏற்ப மாணவர்கள் தாங்கள் விரும்பும் 5 பாடங்களை விருப்பம் போல தேர்வு செய்துகொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை மூலம் உத்தரவிடப்பட்டது. அதன்படி மாணவர்கள் ஆங்கிலம், தமிழ், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களையும் கணக்கு தவிர்த்து ஆங்கிலம், தமிழ், உயிர் அறிவியல், வேதியியல் இயற்பியல் ஆகிய பாடங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.