சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என என எவரும் தப்பவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த 52 வயது செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று; சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளார்.