மேலூர்: சென்னையிலிருந்து இ-பாஸ் இல்லாமல் பயணிகளுடன் வந்த ஆம்னி பஸ்சை, சூரப்பட்டி சோதனைச்சாவடியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் வந்த 38 பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்ட எல்லையான கொட்டாம்பட்டி அருகே, சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார், மருத்துவம் மற்றும் வருவாய்த்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் டூவீலர், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் அனுப்பப்படுகின்றன.