தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வார்டு அமைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நோயாளி அணியும் உடையணிந்து, பெண்கள் வார்டில் புகுந்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனால், பயந்து போன அந்த நபர், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், உடலை காயப்படுத்திக் கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு, விசாரித்தனர்.