சென்னை: நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கான இலவச வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் ஆகியவை இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காயர்(சிஏ) பவுண்டேஷன் தேர்வுக்கான இலவச வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார்.
‘வெப்பினார்’ மூலம் நடக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுன்டேஷன் தேர்வுக்கு உதவும்.