ஐ.என்.டி.யூ.சி மாநிலத்தலைவர் ஜி.காளன் காலமானார்: அம்பத்தூரில் இன்று உடல் தகனம்

சென்னை: ஐ.என்.டி.யூ.சி மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.காளன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் காலமானார். அவரது உடல் இன்று மாலை அம்பத்தூரில் தகனம் செய்யப்படுகிறது. அம்பத்தூர், பிரிதிவாக்கம்  மெயின் ரோடு, துளசி முதல் தெருவை சேர்ந்தவர் ஜி.காளன் (81).  இவர், ஐ.என்.டி.யூ.சி மாநில தலைவர்.  மேலும், இவர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், காளன்  கடந்த ஒரு வாரமாக வயது முதிர்வால்  உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அவர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று மதியம் 3 மணி அளவில் காளனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று (11ந்தேதி) மதியம் நடைபெறுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காளனுக்கு ஒரு மகன், இரு மகள் உள்ளனர். அவரது மறைவை ஒட்டி, அவரது உடலுக்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: