உலகம் முழுவதும் பரவும் கொரோனா தொற்றால், ஆரம்பத்தில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டது. கொரோனா பாதித்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப் பது என்பது தெரியாமல் மிகுந்த சிரமமாக இருந்தது எனக்கூறிய செவிலியர் கள், தற்போது கொரோனா வார்டில் மிகவும் தைரியமாக செயல்படுவதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், `கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்லும்போது குடும்பத்தில் யாரும் ஒத்துக்கொள்ள வில்லை. பின்னர் இதுதான் எங்கள் பணி என அனைவரும் புரிந்து கொண் டனர். பெண்கள் குடும்பத்தின் பல்வேறு பொறுப்பு வகிக்கின்றனர். குடும்பத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், பல்வேறு பிரச்னைகள், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தற்போது, கொரோனா பணிக்காக குடும்பத்தை மறந்து பணிகளில் சிறப்பாக செயல்படுகிறோம். குடும்பத்தில் இருந்து 15 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் பாசம் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. செவிலியர்கள்தான் முதல்வரிசையில் நின்று நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபடுகிறோம்.