பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள பகுதியில் கடும் வறட்சி, பருவ மழை பொய்த்தது, விவசாய கிணறுகள் வறண்டது போன்ற காரணங்களினால் தென்னை மரங்கள் பட்டுபோய் விட்டன. இவ்வாறு பட்டுப்போன தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றன. பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு,மருதாநதி அணை கோம்பை, சித்தயன்கோட்டை, தேவரப்பன்பட்டி, எம்.வாடிப்பட்டி,சுந்தரராஜபுரம், ஒட்டுப்பட்டி, சேவுகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது.