புற்றுநோய் மையத்திற்கு 51 லட்சம் நிதியுதவி: ஆளுநர் வழங்கினார்

சென்னை: அடையாறு புற்றுநோய் மையத்திற்கு தமிழக ஆளுநர் தனது தனிப்பட்ட அதிகார வரம்பிலிருந்து 51 லட்சம் நிதியுதவி வழங்கினார். தமிழக ஆளுநரின் தனிப்பட்ட அதிகார வரம்பு நிதியிலிருந்து 51 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மையத்தில் அபாயகட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையின் முதல் தவணையாக 11 லட்சத்தை ஏப்ரல் 17ம் தேதி வழங்கினார். 2வது தவணை தொகையான 40 லட்சத்தை நேற்று வழங்கியுள்ளார்.

Related Stories: