தோகா, ரியாத்தில் இருந்து வந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா

சென்னை: கத்தார் நாட்டின் தோகாவில் இருந்து 177 இந்தியர்கள், சிறப்பு தனி விமானத்தில் கடந்த 5ம் தேதி சென்னை சர்வதேச முனையத்துக்கு வந்தனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்வி நிலையம் மற்றும் சென்னை நகரில் உள்ள சொகுசு ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முடிவு தற்போது வந்துள்ளது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதேப்போல் கடந்த 4ம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து 153 இந்தியர்களுடன் சிறப்பு தனி விமானம் சென்னை வந்தது. அதில் வந்தவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 14  பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: