சென்னை: கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவை சேர்ந்த திருமாவளவன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன், ராமகிருட்டினன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, சரீப், இனிகோ இருதயராஜ், வன்னிஅரசு, நெல்லை முபாரக், அப்துல் சமது, பெரியார் சரவணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்துள்ள நிலையில், அந்த பேரிடரின் அனைத்து வகையான பாதிப்புகளிடமிருந்தும் நாட்டு மக்களை பாதுகாப்பது அனைத்து மக்கள் நலன் அரசின் கடமையாகும். ஆகவே, கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும்.